மாவீரர் நாள் நினைவேந்தல் நேற்று பிரான்ஸில் எழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டது.
உணர்வு பூர்வமாக நடைபெற்ற இந்த மாவீரர் அஞ்சலி நிகழ்வில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தமிழீழ தேசிய கொடி ஏற்றப்பட்டதுடன் விடுதலை புலிகளின் தலைவரின் முன்னைய மாவீரர் நாள் உரை திரையிடப்பட்டது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரான்ஸ் நாட்டில் வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
பரிஸ் Porte de la Vilette பகுதியில் அமைந்துள்ள Paris Event Centre மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.